2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கடும் மழையால் கண்டி மாவட்டத்தில் 166 பேர் பாதிப்பு

Kogilavani   / 2015 மே 12 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாணத்தில் கடந்த இருதினங்களாக பெய்துவரும் கடும்மழைக் காரணமாக கண்டி மாவட்டத்தில், பாதத்தும்பறை மற்றும் கங்கவட்ட கோரள பிரதேச செயலக பிரிவுகளில்; 32 குடும்பங்களை சேர்ந்த 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(10) முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக பாத்ததும்பறை பிரதேச செயலக பிரிவில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஆறு பேரும் கங்கவட்ட கோரள பிரதேச செயலக பிரிவில் 30 குடும்பங்களை சேர்ந்த 160 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்கள் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .