2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பஸ் பள்ளத்தில் பாய்ந்து விபத்து

Gavitha   / 2015 மே 18 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ,செ.இ.பெருமாள்

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று திங்கட்கிழமை (18) காலை 5.35 மணியளவில், கினிகத்ஹேனை கலுகல பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியது.

பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் பிரதான வீதியை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து, ஒரு வீட்டின் கொங்கிறிட் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 11 பேர் படுங்காயமடைந்த நிலையில்  2 பேர் கிதுல்கலை தெலிகம வைத்தியசாலையிலும் 9 பேர் கினிகத்ஹேனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்ட பின்னர்,  கினிகத்ஹேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரில் 4 பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால், சாரதியால் பஸ்ஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாத நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கினிகத்ஹேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்ஹேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .