2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூராட்சி சபைகளிடம் டிரக்டர் வண்டிகள் கையளிப்பு

Administrator   / 2015 ஜூன் 17 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் சப்ரகமுவ மாகாண உள்ளூராட்சி சபைகளுக்கு டிரக்டர் வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று (17) சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்ட சப்ரகமுவ மாகாண முதலமைச்சரும் மாகாண உள்ளூராட்சி சபை அமைச்சருமான மஹிபால ஹேரத் டிரக்டர் வண்டிகளை உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்களிடம் கையளித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தில் மூன்று நகர சபைகள் உட்பட 25 பிரதேச சபைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், மாகாண சபையின் பிரதி பிரதான செலாளர் கபில பெரேரா, பிரதான அமைச்சின் செயலாளர் பி.எம்.பி.என்.பெலிகமன, உதவி செயலாளர் ஆர்.சி.கே. விரசேகர, சப்ரகமுவ மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் டீ.டபிள்யூ.எஸ்.ராஜபக்ஷ, உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .