Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 03 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.ஆ.கோகிலவாணி
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தையின் நான்காம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் தோட்ட தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
'முதலாளிமார் சம்மேளனத்துடன் இதுவரை நான்குகட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவிட்டோம். ஆனால், அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலே முடிவடைந்துள்ளன. இதனால், தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
இதன்படி தொழிலாளர்கள் 8 மணித்தியாலம் வேலை செய்தாலும் அப்பணிகளை மெதுவாக முன்னெடுப்பார். நாங்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடலாம். ஆனால், தேர்தல் காலத்தில் இது தேர்தல் சட்டங்களை மீறுவதாக அமையும். அத்துடன் விசமிகள் எங்களது போராட்டத்துக்கு இடையூறை ஏற்படுத்துவர். இதன்காரணமாகவே நாங்கள் மெதுவாக பணிசெய்யும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago