Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Sudharshini / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாமென இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2015ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தாமல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'இவ்வாண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை வழமைபோன்று இம்மாதம் முதல்வாரத்திலே ஆரம்பமாகியுள்ளது. இக்காலப்பகுதியிலே, பொது தேர்தலும் நடைபெறுவதால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி பரீட்சை நிலையங்களுக்கு அருகில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் அனைத்து வேட்பாளர்களிடமும் அன்பாக வேண்டிக்கொள்கின்றேன்.
நாட்டின் எதிர்கால தூண்களாக கருதுகின்ற மாணவச் செல்வங்கள், எவ்வித இடையூறுகளுமின்றி பரீட்சைக்கு தோற்றுவதை நாம் உறுதிச் செய்யவேண்டும்.
பிரசார கூட்டங்களுக்காக பஸ்களை பெற்றுக்கொள்ளும் வேட்பாளர்கள் மாணவர்களுக்கான போக்குவரத்துக்கு தடையின்றி பிரசாரங்களை முன்னெடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தங்களுக்கான பஸ்களை இ.போ.ச ஊடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பீர்களாயின் அது மாணவர்களின் போக்குவரத்தை பாதிக்காமல் இருக்கும்' என்றும் அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
51 minute ago