2026 மே 08, வெள்ளிக்கிழமை

dd

காபட் கலவையில் மோதி முச்சக்கரவண்டி விபத்து

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.செல்வராஜ்

ஹோல்புறூக்கில் இன்று புதன்கிழமை (05) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில், அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

மன்றாசி நகரிலிருந்து ஹோல்புறுக் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியே பிரதான வீதியில் குவிக்கப்பட்டிருந்த காபட் கலவையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹோல்புறூக் நகரத்திலிருந்து டயகம நகரம் வரை செல்லும் பிரதான பாதையில் காணப்படும் குழிகளை மூடும் நடவடிக்கையில் வீதி அதிகாரசபை ஈடுபட்டு வருவதால்  வீதியின் இரு மருங்குகளிலும் காபட் கலவை கொட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .