2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஒருமாத நாடகத்தைக்கண்டு ஏமாற வேண்டாம்: இராஜதுரை

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக நடத்தப்படும்;; ஒருமாத நாடகத்தைக்கண்டு ஏமாற வேண்டாம். வழங்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பதை ஆராய்ந்து வாக்களிக்குமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பெ.இராஜதுரை கோரியுள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள், இளைஞர், யுவதிகள் மிகமுக்கியமாக எமது தலைமுறைக்கு நல்வழிகாட்ட முன்னிற்கும் ஆசிரியர்கள், படித்த புத்தி ஜீவிகள் இதனை உணர்;ந்து செயற்பட வேண்டும்' என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர்,

'சமூகத்தின் எதிர்கால இலக்கை மையமாகக்கொண்டு சிந்தித்து செயற்படுமாறு இச்சமூகத்தின்; அடிமட்டத்திலிருந்து வந்தவன் என்ற வகையில் உங்களிடம் உரிமையோடு கேட்டுக்கொள்கின்றேன்.

மலையக தோட்டப்புற அபிவிருத்தி, திட்டமிடப்பட்ட துறைசார்ந்த அபிவிருத்திகளை முன்னெடுப்பதே எமது குறிக்கோளாகும்.

ஒரு பிரதேசதம் மற்றும் அதை சார்ந்த மக்களின் அபிவிருத்தி என்பது நீண்டகால நோக்கம் கொண்டதாகவும் நிலையான, நிலைத்து நிற்கும் தன்மையை உடையதாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறில்லாத எந்தவொரு திட்டமும் மக்களுக்கு நன்மையளிக்க போவதில்லை.

இன்று மலையக தோட்டப்புறங்களில், இதுவரை செய்யப்பட்ட பெருவாரியான வேலைத்திட்டங்கள்  இவ்வம்சங்களை கொண்டிராத காரணத்தினாலேயே தொடர்ச்சியாக எமது மக்கள் வறுமையில் வாடுகின்றனர். ஒரு சமூக அபிவிருத்தியானது  உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள், வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள், சமூக அபிவிருத்தித்திட்டங்களை கொண்டதாக இருத்தல் வேண்டும்' எனவும் அவர் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .