Freelancer / 2023 ஜனவரி 11 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரியோரோவ பிரதேசத்தில் புதன்கிழமை முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
பூப்புனிதநீராட்டு விழா ஒன்றிற்கு ஐவர் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த வேளை ஜெயசேகெதர சந்திக்கு அருகாமையில் குறித்த முச்சக்கரவண்டி வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
58, 65 வயதுடைய இரண்டு ஆண்களும், 46,28 வயதுடைய மூன்று பெண்களும் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 59 வயதுடைய பெண் பலியானார்
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
8 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Mar 2026