2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

அக்குறணை வெள்ளத்துக்கு ’113 கட்டடங்களே காரணம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அக்குறணை நகரானது, அடிக்கடி வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்வதற்கு, அங்கு சட்டவிரோதமான நிர்மாணிக்கப்பட்டுள்ள 113 கட்டடங்களே காரணமென, அக்குறணை பிரதேச செயலாளர் வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், அக்குறணை நகரானது, கடந்த இரு வாரங்களில் இருமுறை, வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டதாகச் சுட்டிக்காட்டினார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் போதே, இவ்விடயம் தொடர்பில் தெரியவந்ததாகத் தெரிவித்த அவர், மேற்படி கட்டடங்களை அகற்றுவதற்கு, பிரதேச சபைக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் மேலம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .