2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அன்னையர்களுக்கு உரிமையை வழங்கு

R.Maheshwary   / 2022 மே 08 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

அன்னையர்களை கௌரவிக்கும் முகமாக பிரிடோ நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச அன்னையர் தினம் “வெளிநாட்டு செலவாணியினை பெற்றுக்கொடுக்கும் அன்னையர்களுக்கு உரிமையை வழங்கு” எனும் தொனிப்பொருளில் டிக்கோயா நகர மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில் அன்னையர்கள் மகிழ்வுரும் வகையில் அவர்களின் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் 'அந்நியச் செலவாணியினை பெற்றுத்தரும் அன்னையரின் பாதுகாப்பை உறுதி செய்' 'தாய்மார்களின் உரிமைகளை அரசு உறுதி செய்ய வேண்டும்.' :குடும்ப வலுத்திட்டத்தை நடைமுறை படுத்து போன்ற  வாசகம் எழுதிய சுலோக அட்டைகளை கையில் ஏந்தியவாறு கோசமிட்டனர்.

இந்நிகழ்வில் பிரிடோ நிறுவனத்தின் உதவி நிறைவேற்று பணிப்பாளர் சந்திரசேகரம், இணைப்பாளர் கே.புஸ்பராஜ்,   தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .