Editorial / 2025 பெப்ரவரி 18 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் குழுவில் ஒரு மாணவர் நீச்சல் தடாகத்தில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்து கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெனிக்ஹின்ன, குண்டசாலை, தம்பராவ பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 26 வயதான சந்தோஷ் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், இந்திய பல்கலைக்கழக மாணவர் ஆவார்.
பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் அடங்கிய கொண்ட குழு ஒன்று கடந்த 16 ஆம் திகதி விடுதியில் தங்கியிருந்து இன்று (18) அதிகாலை வரை நீச்சல் தடாகத்தில் நீந்திக்கொண்டிரந்தனர். இதற்கிடையில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீச்சல் குளத்தில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago