2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

இரத்தினபுரியில் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

George   / 2016 மார்ச் 02 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி மாவட்டத்தில் அகலவத்தை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான 6 தோட்டங்களை சேர்ந்தத் தொழிலாளர்கள் புதன்கிழமை(02) இரத்தினபுரி மாவட்ட தொழில் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமது சம்பளத்தில் பிடிக்கப்பட்ட சேமலாப நிதியை பெற்று கொடுக்குமாறு கோரியே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கிரிபத்கல, வடாபத, பிங்கந்த, தொலஸ்வல, நிரியெல்ல, நொரகல ஆகிய 6 தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'தொழிலாளர்களது மாதாந்த சம்பளத்தில் சேமலாப நிதிக்காக சுமார் 339 மில்லியன் ரூபாய் தொகையை அகலவத்தை பெருந்தொட்ட கம்பனி சேகரித்துள்ளது. இதனை உடனே பெற்று தருவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .