2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

இரத்தினபுரியில் வெள்ளம்

R.Maheshwary   / 2022 மே 15 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்த உதய

கடந்த சில தினங்களாக இரத்தினபுரி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக களுகங்கை உள்ளிட்ட எனைய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளன.

இதனால் சிறிதளவு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது என இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலினி லொக்குபோத்தாகம தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நேற்று (140 களுகங்கையின் நீர்மட்டம் 8.5 மீட்டரை கடந்துள்ள நிலையில், இரத்தினபுரி நகரம் மற்றும் அதனை அண்மித்த தாழ்நிலப் பிரதேசங்களில் சிறிதளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இரத்தினபுரி நகரில் ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பட்டுகெதரவிலிருந்து முவகம ஊடான மாற்று வீதி மற்றும் கொழும்பு வீதியின் இரத்தினபுரி நகருக்குச் செல்லும் மாற்று வீதியின் மஹவெல பிரதேசமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .