2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இராகலையிலிருந்து மேலும் மூவர் புறப்பட்டனர்

R.Maheshwary   / 2022 மே 09 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இராகலை நகரில் இருந்து கொழும்பை நோக்கி  மூவர் நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த மூவரும் இன்று (09) காலை 8மணியளவில் தமது நடை பயணத்தை இராகலை நகரில் ஆரம்பித்தனர்.

இராகலையைச் சேர்ந்த மொஹமட் நிசாம்,  எஸ்.கோபாலகிருஸ்ணன் எஸ்.மகேந்திரன் ஆகியோரே நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

இராகலை பிரதேச மக்களின் ஆதரவுடன் கொழும்பு நோக்கி நுவரெலியா, ஹட்டன், அவிசாவளை வழியாக முன்னெடுக்கும் இந்த நடைபயணப் போராட்டம் கொழும்பு- காலி முகத்திடல் போராட்ட களத்தில் நிறைவடையவுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .