2026 மே 01, வெள்ளிக்கிழமை

உலக முடிவில் விழுந்து பெண் மாயம்

ஆ.ரமேஸ்   / 2018 நவம்பர் 11 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டிபொல பொலிஸ்பிரிவுக்குட்படட ஹோட்டன் சமவெளிப் பகுதியிலுள்ள உலக முடிவைக் காணச்சென்ற வெளிநாட்டு பெண்ணொருவர், உலக முடிவின் பள்ளத்தில் விழுந்து காணாமல் போயுள்ளார் என, பட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 7.30 மணியளவில், உலக முடிவுக்குச் சென்ற, ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஹோட்ரா என்ற 35 வயதுடைய பெண்ணே, இவ்வாறு காணாமல் போயுள்ளார் என, விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.   

இவர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், உல்லாசப் பயணத்துக்காக, நுவரெலியாவுக்கு வ​ருகை தந்து, விடு​தியொன்றில் தங்கியிருந்துள்ளார்.

காணாமல் போன பெண்ணைத் தேடும் பணிகளை, இராணுவத்தினரும் நுவரெலியா பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .