2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

எரிகாயங்களுக்குள்ளான் 2வயது குழந்தை வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

பாரிய எரிகாயங்களுடன் இரண்டு வயது குழந்தையொன்று, நாவலப்பிட்டிய வைத்தியசாலையில், நேற்று நள்ளிரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை குயினா கிழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த அனுஷாகுமாரி என்ற குழந்தையே, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தை அடுப்பில் தவறி விழுந்ததாக, குழந்தையின் தாய் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும் இது கொலை முயற்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .