2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கூரைத்தகரங்களை வழங்குவதற்கு 4 இலட்சம் ஒதுக்கீடு

Kogilavani   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறிய குடும்பங்களின் நலன் கருதி கூரைத்தகரங்களை வழங்குவதற்காக  தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 4 இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக  தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன், நேற்று(24) தெரிவித்தார்.

அம்பகமுவ பிரதேச சபையின் ஊடாக ஒதுக்கப்பட்ட  2 இலட்சம் ரூபாய் நிதியினால் பெற்றுகொள்ளப்பட்ட  கூரைத்தகரங்கள் கினிகத்தேனை பிரதேச செயலாளரின் பரிந்துரைக்கேற்ப சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை கடவளை, ஹட்டன், ரொத்தரஸ், நோர்வூட் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 வறிய குடும்பங்களுக்கு கூரைத்தகரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .