2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கட்டாக்காலி நாய்களால் விபத்துகள் அதிகரிப்பு

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் மாத்தளை மற்றும் தம்புள்ள ஆகிய நகரங்களுக்கிடையில் உள்ள உப நகரங்களில் கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விபத்துகள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக இந்த வீதியில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களே  இவ்வாறு விபத்துகளுக்கு உள்ளாகின்றனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் வாகனங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், கட்டாக்காலி நாய்கள் பயமின்றி வீதிகளில் கூட்டம் கூட்டமாக அலைவதாகவும் குறிப்பாக பலாபத்வல, மடவல, நாவுல மற்றும் லேனதொர உள்ளிட்ட உப நகரங்களிலேயே கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .