2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காதலி படுகொலை: காதலன் தப்பியோட்டம்

Editorial   / 2023 மே 04 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

தன்னுடைய காதலியை படுகொலைச் செய்துவிட்டு  பிரதேசத்தில் இருந்து காதலன்தப்பியோடி தலைமறைவாகிவிட்ட சம்பவமொன்று கண்டி, பல்லேகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

காலபுர நத்தரம்பொத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது. பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட வருணி நிரோஷா (வயது 30) என்ற பெண்​ணே இவ்வாறு படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், புதன்கிழமை (03) இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்த பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .