2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

குறைந்த விலையில் கோழி இறைச்சியை வாங்க வேண்டாம்

R.Maheshwary   / 2022 மார்ச் 30 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்புடன், மாத்தளை மாவட்டத்தில் கோழி பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகளை குறைந்த விலைக்கும் விற்கும் செயற்பாடு முன்​னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, மாத்தளை மாவட்டத்தில் குறைந்த விலைகளில் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டால், அவற்றை கொள்வனவு செய்ய வேண்டாம் என,கோழி இறைச்சி விற்பனையாளர்கள் நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பண்ணைகளில்  வேலை செய்யும் பணியாளர்களைப் பயன்படுத்தி சில இடைத்தரகர்கள் இவ்வாறான செயல்களை செய்வதாகவும் குறிப்பாக பண்டிகைக் காலங்களில் இவ்வாறு உயிரிழக்கும் கோழிகளை வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பாமல், நுகர்வோரின் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பும் செயற்பாடும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X