2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கொரோனா தொற்றினால் 20 வயது யுவதி மரணம்

Kogilavani   / 2021 பெப்ரவரி 19 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா  
 
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில்,  பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர், சிகிச்சை பலனின்றி நேற்று (18) இரவு மரணமடைந்துள்ளார்.
 
பதுளை ரிதிமாலியத்தை ஆடைத் தொழிற்சாலையில் தொழில்புரிந்து வந்த 20 வயது யுவதியே கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார்.
 
இவர் ககாகொல்லை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக  பதுளை அரசினர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
 
இந்நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக, அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X