2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கோழிப் பண்ணையிலிருந்து 240 கோழிகள் திருட்டு

R.Maheshwary   / 2023 ஜனவரி 26 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

ஹதரலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்த பிரதேசத்திலுள்ள கோழிப் பண்ணையிலிருந்து 240 கோழிகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் ஹதரலியத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (24) கோழிப் பண்ணைக்குள் நுழைந்த சிலர், பண்ணையின் கூடுகளை வெட்டி அகற்றிய பின்னர், கோழிகளைத் திருடிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

திருட்டு சம்பவம் இடம்பெற்ற ​போது, பண்ணையில் 2000 கோழிகள் காணப்பட்டதாகவும் பண்ணையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X