2025 ஜூன் 28, சனிக்கிழமை

சிறுவனை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய நபர் கைது

Sudharshini   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டையில் 12  வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 38 வயதுடைய நபர் ஒருவரை, பொலிஸார் இன்று(30) கைதுசெய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை நகருக்கு அண்மித்த பிரதேசத்தில்  வைத்து குறித்த சிறுவனை ஏமாற்றி சந்தேக நபர், தனது  வீட்டுக்கு அழைத்துச்; சென்று இத்துஷ்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் பெற்றோர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் பின் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .