2025 மே 15, வியாழக்கிழமை

சஜித்தை கை கழுவினார் வடிவேல் சுரேஸ்

Editorial   / 2023 பெப்ரவரி 09 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான வடிவேல் சுரேஸ், ஐக்கிய மக்கள் சக்தியில் வகித்த சகல பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பிலான பிரசாரக் கூட்டமொன்றை வடிவேல் சுரேஸ் எம்.பி,  மடுல்சீமையில் ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்துகொள்ளவிருந்தார்.

எனினும், அந்தக் கூட்டத்துக்கு சமூகமளிக்காத சஜித் பிரேமதாஸ, வெளிமடையில் நடைபெற்ற மற்றுமொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். மடுசீமை கூட்டத்துக்கு வரவே இல்லை. இதனால், அங்கிருந்த மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .