2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

டிப்பர் வாகனம் குடை சாய்ந்ததில் பெண் படுகாயம்

Gavitha   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டனர் பொகவந்தலாவ பிரதான வீதியில், டிக்கோயா அலுத்கால பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (19) டிப்பர் ரக வாகனமொன்று வீதியில் குடைசாய்ந்ததன் காரணமாக, பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாகனம் ஹட்டனிலிருந்து, டிக்கோயா பகுதியை நோக்கி வேகமாகச் சென்றுக்கொண்டிருந்த போது குடைசாய்ந்து பஸ்ஸூக்காக காத்திருந்த பெண்ணின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .