2026 ஜனவரி 21, புதன்கிழமை

திடீரென கீழே விழுந்து ஒருவர் மரணம்

Kogilavani   / 2021 மே 05 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹல்துமுல்ல நிக்கபொத்த விவசாய சேவைத் திணைக்களத்துக்கு, இன்று(5)  வந்த 65 வயது நபரொரவர், திடீரென கீழே விழுந்து மரணமடைந்துள்ளார் என்று, ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

நிக்கபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே, இவ்வாறு மரமணடைந்துள்ளார்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கொஸ்லாந்தை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக, வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில், ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X