R.Maheshwary / 2022 மார்ச் 07 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பெருந்தோட்டங்களில் தொழிற்சட்டங்கள் முற்று முழுவதாக மீறப்பட்டுக் கொண்டிருப்பதுடன், தொழிலாளர்கள் உதாசீனம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், அவர்களது தினச் சம்பளத்திலும், சட்ட விரோதமான பல்வேறு நிபந்தனைகள் புகுத்தப்பட்டுள்ளமை போன்ற தான்தோன்றித்தனமான செயல்பாடுகளை, அனுதிக்க முடியாதென்று, குறிப்பிட்டார்.
பதுளை- செல்வக்கந்த பெருந்தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு மின்சார வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
தற்போது கூட்டு ஒப்பந்தம் பற்றி பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இக் கூட்டு ஒப்பந்தத்திற்கு தான் எதிரானவனல்ல. ஆனால், அவ் ஒப்பந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சாதகமாக அமைய வேண்டும். தொழிலாளர்களது மேம்பாடுகள், சேமநலன்கள், சம்பள உயர்வுகள், உரிமைகள் என்ற ரீதியில், தொழிலாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில், ஒப்பந்த சரத்துக்கள் அமையாவிட்டால் அவ் ஒப்பந்தத்தில் பயன் கிடையாது.
தொழில் துறையொன்றிற்கு ஒப்பந்தம் ஒன்று இருக்க வேண்டியது அவசியமாகும். அது எவ்வாறானதொரு பெயராகவும் இருக்கலாம். ஆனால், அவ் ஒப்பந்தம் பக்கம் சார்ந்ததாக இருந்துவிடக்கூடாது. தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படல் வேண்டும். இது விடயத்தில், தான் மிகுந்த கவனத்தைச் செலுத்துவேன் என்றார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் பொறுமையாக இருந்து விட மாட்டார்கள். அவர்களது பொறுமையை சோதனையிடக்கூடாது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றார்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026