Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மார்ச் 28 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
கல்விச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த கந்தகெட்டிய, வெவேதன்ன மகா வித்தியாலய மாணவனான ஆர்.எம்.சசிந்த மதுசான் (வயது 13), பதுளை ஓயா ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
பதுளை, ரன்புகுலாவெல நீர் மின்திட்டத்தை பார்வையிடுவதற்காக, வெவேதன்ன மகா வித்தியாலய மாணவர்கள் சிலரும், ஆசிரியர்களும் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டிருந்தனர்.
மாணவர்கள், பதுளை ஓயா ஆற்றில் குளிக்கச் சென்றபோதே, மேற்படி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கிய மாணவனை உடனடியாக மீட்டு, கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் அம்மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago