Editorial / 2026 மே 15 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

காமினி பண்டார இலங்கதிலக்க
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மவுசாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது.
தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பிற்குச் சொந்தமான லக்ஷபான நீர்மின் உற்பத்தி நிலையத் தொகுதியின் கீழ் உள்ள இந்நீர்த்தேக்கங்களில், கடந்த ஒரு வார காலப்பகுதியில் பெய்த மழையினால்:
மவுசாக்கலை நீர்த்தேக்கம்: 05 அடி
காசல்ரீ நீர்த்தேக்கம்: 15 அடி
என்ற அளவில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அந்தந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
போதுமான மழை வீழ்ச்சி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இன்று (15) காலை நிலவரப்படி மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம், அவற்றின் வான்மட்டத்திலிருந்து முறையே 37 அடி மற்றும் 28 அடி வரை குறைந்திருந்ததாகப் பொறியியலாளர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
லக்ஷபான நீர்மின் உற்பத்தி நிலையத் தொகுதியின் கீழ் உள்ள லக்ஷபான, புதிய லக்ஷபான, பொல்பிட்டிய, பிராட்லண்ட்ஸ், கேனியன் மற்றும் விமலசுரேந்திர ஆகிய மின்நிலையங்களுக்குத் தேவையான நீர் பிரதானமாக மவுசாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ள நிலையை இப்புகைப்படங்கள் காட்டுகின்றன.



1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago