Janu / 2024 ஜனவரி 29 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த நான்கு பேருக்கு ‘தேசமான்ய’,‘தேசகீர்த்தி’,‘சிறீலங்காமான்ய’ மற்றும் ‘தேசபந்து’ என்ற கௌரவப்பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
"வாழும்போதே வாழ்த்துவோம்" என்ற தொணியில் ஸ்ரீ சக்தி ஆன்மீக ஹிந்து அமைப்பு ஏற்பாட்டில் மாத்தளை மஹாத்மா காந்தி மண்டபத்தில் சனிக்கிழமை (27) இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன் மேலும் அவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஹைபொரஸ்ட் வ/அருணோதயா இந்துக்கல்லூரியின் அதிபர் மு.டயஸ்குமார்,உடப்புஸ்ஸலாவை சென் மார்க்ரட் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான பிரமகுரு சிவஸ்ரீ த.தேவேந்திரன் குருக்கள், ஆசிரியர் ஆலோசகர் சா.ரகுநாதன் மற்றும் வர்த்தகர் சி.மகேந்திரன் ஆகிய நால்வர் கௌரவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்

2 hours ago
8 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
28 Dec 2025
28 Dec 2025