2025 மே 16, வெள்ளிக்கிழமை

நுவரெலியாவில் கோர விபத்து; 7 பேர் உயிரிழப்பு

Editorial   / 2023 ஜனவரி 20 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா - நானுஓயா ஊடாக  தலவாக்கலை பகுதியை நோக்கிச் செல்லும் இரதல்ல பிரதான குறுக்கு வீதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி பாரிய விபத்து சம்பவித்துள்ளது.

இதில் சுமார் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (20) மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்து சம்பவத்தில் வேன் ஒன்றி்ல் பயணித்தவர்களி்ல் ஐந்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பஸ்ஸில் பயணித்த 42 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களை மீட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .