Editorial / 2021 ஏப்ரல் 23 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 22 ஆம் திகதி இரவு மரணமான பெண்ணொருவருடன், மொத்த மரணங்கள் 16ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தின் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் 77 வயது நிரம்பிய பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் 22 ஆம் திகதி இரவு ரணமானார்.
இம் மரணத்தை தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மரணமானவரின் உறவினர்கள் தகனம் செய்ய விரும்பாதலால், அவரின் ஜனாசா மட்டக்களப்பு பகுதிக்கு இன்று (23) எடுத்துச்செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்படவுள்ளது. இத்தகவலை பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார்.
தியத்தலாவையில் 05 மரணங்கள், பண்டாரவளையில் 04 மரணங்கள், பதுளையில் 03 மரணங்கள், வெலிமடையில் 04 மரணங்கள் என்ற வகையில் பதுளை மாவட்டத்தில் 16 பேர் கொரோனா தொற்றினால் மரணமாகியுள்ளனர். என பதுளை மாவட்ட கொரோனா தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது. மரணமானவர்களில் ஏழு பேர் பெண்களாவர். ஒன்பது பேர் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், மேற்படி மருத்துவமனையில் நோயாளர்கள் 12 பேருக்கு 'என்டிஜன்' பரிசோதனை இன்று (23) மேற்கொள்ளப்பட்ட போது, அவர்களில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானமை தெரிய வந்துள்ளது. இவர்களில் ஹப்புத்தளை தங்கமலை தோட்டத்தின் தாயும் மகனும் அடங்கியுள்ளனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago