2026 ஜனவரி 21, புதன்கிழமை

பத்தனை முகாமில் 15 பேருக்கு தொற்று

Kogilavani   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பத்தனை ஸ்ரீ பாத கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில், 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, இம்முகாமுக்குப் பொறுப்பான சுகாதார பிரிவு அதிகாரி தெரிவித்தார்.

மேற்படி முகாமில் 190 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே, 15 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா, கட்டார், இந்தோனேசியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களே, மேற்படி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களில் இலங்கையைச் சேர்ந்த 14 பெண்கள், ஆணொருவர் உள்ளடங்களாக 15 பேரே தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X