Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடை பிரதேசத்தில், டெங்கு நோய் மிக வேகமாகப் பரவி வருவதால், பலாங்கொடை நகரப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களைச் சுத்தம் செய்தல், புகை அடிக்கும் திட்டம் ஆகியவற்றை, பலாங்கொடை நகரசபை, பொது சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுத்தி வருகிறது.
அதிகளவு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிைலயில், இந்நிலைமை மேலும் தீவிரமடைவதைத் தவிர்ப்பதற்காகத் துரித டெங்கு நோய்த்தடுப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .