2025 ஜூன் 21, சனிக்கிழமை

பஸ் விபத்து 29 பேர் காயம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, சதிஸ், ராமசந்திரன்

ஹட்டனிலிருந்து சாமிமலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட் நியுவெலிகம பிரதேசத்திலேயே இன்று (23) மாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிக வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே இந்த விபத்துக்கான காரணமென நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த சிலரின்  நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .