Editorial / 2025 ஜூலை 31 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
யானை பாகனின் உதவியாளராக பணியாற்றிய 25 வயதான இளைஞன், கண்டி வாவியில் மிதந்த நிலையில், வியாழக்கிழமை (31) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி எசல பெரஹராவில் பங்குபற்றுவதற்காக, கேகாலை அரநாயக்க பிரதேசத்தில் இருந்து வருகை தந்திருந்த பாகனின் உதவியாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் தொடர்பாக கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
19 minute ago
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
03 Feb 2026