2025 மே 15, வியாழக்கிழமை

பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு

Freelancer   / 2023 ஜனவரி 12 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அக்குறனை , புளுகொஹொதென்ன பல்லேவெலிகெட்டிய பகுதியைச் சேர்ந்த  தெரிவு செய்யப்பட்ட   பாடசாலை மாணவர்களுக்கு இலவச பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் திங்கட்கிழமை (09) வழங்கப்பட்டன.

அப்துல்கலாம் ஞாபகார்த்த உலகளாவிய அறக்கட்டளையினால்  50 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவை வழங்கப்பட்டன. இதற்கான நிதியுதவியை இஸ்லாமிய செரன்டிப் பவுண்டேசன் நிதியத்தின் தலைவர் தேசமாண்ய, தேசபந்து அல்ஹாஜ் கே.எம். எஸ்.எம். றாசிக் வழங்கி இருந்தார்.

நிகழ்வில், அப்துல்கலாம் ஞாபகார்த்த உலகளாவிய அறக்கட்டளையின் தலைவர் என். கருணாகரன், இஸ்லாமிய செரன்டிப் பவுண்டேசன் நிதியத்தின் தலைவர் கே. எம். எஸ், எம். றாசிக், எம். கைசர், மற்றும்  பொலிஸ் அதிகாரி  ஆகியோர் கலந்துகொண்டனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .