2024 மே 09, வியாழக்கிழமை

பால் கொள்கலனுடன் மோதிய கார்

R.Maheshwary   / 2022 மே 08 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

அதிக வேகத்துடன் பயணித்த காரொன்று, முன்னால் சென்றுக்கொண்டிருந்த பால் கொள்கலன் லொறியுடன் மோதியதால், கார் பலத்த சேதமடைந்துள்ளது.

நேற்று (7) காலை 7.30 மணியளவில் ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் ரொசல்ல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து ஹட்டனுக்கு சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் லொறிக்கு பின்னால், களுத்துறையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த  கார் மோதியுள்ளது.

இதன்போது குறித்த காரில் சிறு குழந்தை உள்ளிட்ட மூவர் இருந்துள்ளதுடன், விபத்தால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X