R.Maheshwary / 2023 ஜனவரி 01 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
பெருந்தோட்ட பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் அவர்களின் போசாக்கு நிலையை உயர்த்தவும் தற்போதைய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய உதவியின் கீழ் பெருந்தோட்டப் பெண்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், பெண்களுக்கான சுகாதார பொருள்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
அரசாங்கம் தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தப்பட்டு அது நிறைவேற்றப்பட்டு வருகின்றது. மாத்தளை மாவட்டத்தில் குறிப்பாக பெருந்தோட்ட மக்களின் பொருளாதார சமூக அபிவிருத்திக்காக புத்தாண்டில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் என்றார்.
1 hours ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
16 Jan 2026