Sudharshini / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்ந்த நால்வக்கு, தலா 12,500 ரூபாய் தண்டப் பணம் விதித்து ஹட்டன் நீதவான் இன்று (09) விடுவித்துள்ளார்.
பொகவந்தலாவ, பொகவான தோட்ட பகுதியில் மேற்படி நால்வரும், பல நாட்களாக சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
இதேவேளை,மாணிக்கக்கல் அகழ்வுக்காக தோண்டப்பட்டுள்ள பாரிய குழிகளை, உரிமையாளர் மண் போட்டு மூட வேண்டும் என பொகவான தோட்ட நிர்வாகத்தால் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago