2024 மே 13, திங்கட்கிழமை

‘மண்டைகளை’ குறிவைக்கும் மகன் கைது

Editorial   / 2024 ஜனவரி 26 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தாயை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு பிள்ளைகளின் தாயான 67 வயதான எஸ்.செல்லம்மா என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்த நாவலப்பிட்டிய பொலிஸார், அந்த தாயின்  41 வயதுடைய   மகன் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது தாயை பலமாக தாக்கியதில் அவரது தலை பகுதியில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது விலா எலும்புகள் 22 துண்டுகளாக உடைக்கப்பட்டுள்ளதாகவும் மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தந்தையின் தலையில் பலமாக தாக்கியதில் கடும் காயமடைந்த தந்தை, தனது மூத்த மகளின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர் கடந்த 17 ஆம் திகதி தனது மனைவியை தாக்கியதில் அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு  தனது தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது தாயுடன் வசித்து வந்த சந்தேக நபர் கடந்த 20 ஆம் திகதி அன்று தனது தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில்  16 வயதிலேயே கூலி வேலைக்கு அனுப்பப்பட்டதாகவும் தன்னை பற்றி எவரும் கவலைப்படவில்லை எனவும் கூறியே தாயை தாக்கியுள்ளார்.

பின்னர் அவர் தனிப்பட்ட வேலை ஒன்றிற்காக நாவலப்பிட்டி பிரதேசத்திற்கு சென்று மதியம் 4 மணிக்கு வீடு திரும்பிய நிலையில் அவரது தாய் வீட்டிற்குள் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர் இது தொடர்பில் பிரதேசவாசிகளிடம் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரிடம் தனது தாய் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.  பலமாக தாக்கப்பட்டதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளமை மரண விசாரணைகளின் இருந்து  தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ்.கௌசல்யா

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X