2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்திய செயலாளருக்கு அபராதம்

Gavitha   / 2016 ஜூன் 25 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

மதுபோதையில் வாகனம் செலுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளருக்கு, 16,000 ரூபாய் அபராதம் விதித்து, பதுளை நீதவான் நீதிமன்ற நீதிபதி சம்பிக்க ராஜபக்ஷ, நேற்று வெள்ளிக்கிழமை (24) உத்தரவிட்டார்.

குறித்த நபர் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி, பிக்கு ஒருவர் மீது மோதியதில், குறித்த பிக்கு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தனக்கு எந்த வித நட்ட ஈடும் தேவையில்லை என்று பிக்கு தெரிவித்ததையடுத்து, போதையில் வாகனம் செலுத்தியமைக்காக அவருக்கு நீதிபதி அபராதம் விதித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .