2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மதில் உடைந்து விழுந்து பெண்ணொருவர் பலி

R.Maheshwary   / 2022 மே 08 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் கம்பளை பகுதியில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 72 வயதானவர் என்றும் கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண், மதில் சுவருக்கு அருகிலிருந்த வாழை இலையை வெட்டிய போது, வாழை மரம் முறிந்து மதில் மீது விழுந்த நிலையில், மதில் உடைந்து அப்பெண்ணின் மீது விழுந்துள்ளது.

இதனையடுத்து காயமடைந்த பெண், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .