Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2024 ஜூலை 30 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேகத்தின் பேரில், கள் பொகவந்தலாவ பொலிஸாரால் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மரக்கறி தோட்டத்தில் சிலர் பாரிய குழிகள் தோண்டி சுற்றுச்சூழலை நாசம் செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு ஐவரையும் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள், பலாங்கொடை, எல்பிட்டிய மற்றும் அனுராதபுரத்தை வசிப்பிடமாகக் கொண்ட 34-45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுடன், பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடும் ஒருவரின் பின்புலத்திலேயே இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இரத்தினக்கல் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
31 minute ago
2 hours ago