Editorial / 2018 மே 01 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
இலங்கையின் மிக நீளமான கங்கையான மஹாவலி கங்கையில், குப்பைகள் குவிந்து கங்கை மாசடைந்து வருவதாக, அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் அங்கும்புரை, அக்குறணை ஆகிய பகுதிகளிலிருந்து ஓடும், பிங்கா ஓயாவில் கொட்டப்படும் குப்பைகள், மஹாவலி கங்கைக்கு சேரும் அளவு அங்கு தென்படும் அதேவேளை, இவ்விடத்தில் அமைந்துள்ள பலகை பாலத்தினால், இக் குப்பைகள் தங்கி இருக்கின்றன எனவும், இப் பாலம் அகன்றதுடன் இக் குப்பைகள் நேராக சென்று கட்டுகஸ்தோட்டையில் மஹாவலி கங்கையுடன் சங்கமித்து, கங்கை பாரிய அளவில் மாசடையக்கூடும் என்றும், அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதனால், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு, பிரதேசமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago