2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மாத்தளை பஸ் விபத்தில் 13 பேர் காயமடைந்தனர்

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 28 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளையிலிருந்து செலகம வரை பயணித்த தனியார் பஸ்ஸொன்று மாத்தளை- கொலென்னேவத்த பகுதியில் விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காயமடைந்தவர்கள் மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுள் 3 வயது குழந்தை ஒன்றும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றுமொரு  வாகனமொன்றுக்கு இடமளித்த போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மஹவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X