2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

முதியவர் சடலமாக மீட்பு

Editorial   / 2023 பெப்ரவரி 12 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பி.கேதீஸ்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து முதியவர்  ஒருவரின் சடலம் இன்று (12) பிற்பகல் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பகுதியில் வசித்து வந்த எம்.ஜி.பிரேமதாஸ (வயது 71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 இவர் தலவாக்கலை ஹொலிரூட் பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ள நிலையில்  இன்று பிற்பகல் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X