2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ரூ.75 இலட்சம் செலவில் கேட்போர் கூடம்

Kogilavani   / 2017 மார்ச் 27 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சாமிமலை, கவிரவலை தமிழ் வித்தியாலயத்தில், 75 இலட்சம் ரூபாய் செலவில் கேட்போர் கூடம் அமைக்கப்படவுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தனது அமைச்சின் ஊடாக 75 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதற்கான ஆரம்ப நிகழ்வு, நேற்று முன்தினம்  கவிரவில பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், உதயகுமார், எம்.ராமசாமி  உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X