Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
'கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற மாகாண சபை உறுப்பினர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களை நியமிக்கும் போது, விருப்பு வாக்கு பட்டியலின் அடிப்படையில் உறுப்பினர்களை நியமிப்பதற்கு கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
கபே அமைப்பினால் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 'கடந்த தேர்தலில், மாகாண சபை உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகியுள்ள நிலையில், அவர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதில்; கூடிய கவனம் தேவை.
தேர்தலில் தோல்வியுற்றவர்களை தேசிய பட்டியலில் நியமிப்பதும், விருப்பு வாக்கு ஒழுங்கை மீறி மாகாண சபை உறுப்பினர்களாக நியமிப்பதும்; தவறான செயல்களாகும். ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றம் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள், மாகாண சபைகளுக்கு உறுப்பினர்களைக் தெரிவு செய்யும்போது, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்வதன் மூலம் முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ள முடியும்' என்றார
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
4 hours ago
4 hours ago