Editorial / 2025 ஜூலை 06 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
பெரிய வாகை மரம் முறிந்து வீழ்ந்தால் மஸ்கெலியா- ஹட்டன் போக்குவரத்து தடை பட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை (06) காலை 6.30 இடம் பெற்றுள்ளது.
இன்று அதிகாலை வேளையில் கன மழையுடன் கூடிய காற்று காரணமாக இந்த பாரிய வாகை மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
நோர்வூட் நிவ் வெளி பகுதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அண்மித்த பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மரத்தை அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago